திரு. சேதுராமன் IPS
நமது மூணாறு மண்ணின் மைந்தரும், நம்முடைய வளர்ச்சிக்காக நித்தமும் அரும்பாடுபட்டு வருபவருமான மதிப்பிற்குரிய திரு. சேதுராமன் IPS அவர்கள் கேரள மாநில காவல்துறை பயிற்சி கலைக்கூடத்தின் (Police Training Academy) உயர் பதவியான "இன்ஸ்பெக்டர் ஜெனரலாக" (IG) பதவி உயர்வு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்பொழுது அவர் **கேரள மாநில உளவுத்துறையின்* இன்ஸ்பெக்டர் ஜெனரலாக ( *IG Intelligence* )* தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன், மென்மேலும் அவர் உயர் பதவிகளை அலங்கரித்து நம் மூணாறு மண்ணிற்கு மேலும் பெருமை சேர்ப்பதற்கு நமது KDH வளர்ச்சி மையத்தின் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.