நான் என் மக்களை மட்டும் குறித்தே சிந்திக்கின்றேன்
அனைவருக்கும் வணக்கம், நான் என் மக்களை மட்டும் குறித்தே சிந்திக்கின்றேன். ஆகையால் என்னுள் எந்தச் சலனமும் இல்லை. நமது குழுவில் நிறைய விவாதங்களை முன்வைக்கப்படுன்றன. அவ்வகையான விவாதங்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக இருந்தால் நமக்கு பயன் தரும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை ஆனால் அதே நேரத்தில். தேவையற்ற விவாதங்கள் சிலநேரம் நம்மை அழிவை நோக்கி முன்னெடுப்பதாக அமையும். நம் ஒவ்வொருவரின் கவனமும் நம் மக்களை எதாவது ஒரு வகையில் முன்னேறச் செய்வதாக அமைய வேண்டும். அவ்வகையில் நம்முடைய சிந்தனை அமையவேண்டும். நமது குழுவின் உள்ள பெரியோர்கள் நம்மை நல்ல வழியில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் துணைநிற்பது நம்முடைய கடமையாகும். ஆகவே நண்பர்களே, ஆசிரியர்களே, மேலும் இக்குழுவில் இணைந்துள்ள பெரியோர்களே தேவையற்ற விவாதங்களை தவிருங்கள், தேவையற்ற பதிவுகளையும் தவிருங்கள். ஆரோக்கியமான விவாதங்களை குழுவில் பதிவு செய்யுங்கள். அது நம் சமூகத்தை நல்ல வழியில் கொண்டுசெல்லும். நான் யாருடைய மனமும் புண்பட பதிவு செய்யவில்லை. நாம் நம்மை காப்பாற்றிக் கொள்வோம். நம்மில் எத்தனையோ பெரியோர்கள் பலவழிகளில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை. நாம் யாருடைய மன வருத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நாம் குழுவாகச் செயல்படுவோம். யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதில்லை. அனைவருக்கும் சம உரிமை உள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு இணங்க நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம். குறைகளைக் களைவோம் நிறைகளை மட்டுமே நம் நினைவில் கொள்வோம். நன்றி.